நில புல எண்கள் (சர்வே நம்பர்) என்றால் என்ன? மற்றும் அதன் விபரங்கள்

ஒவ்வொரு மாநிலமும், மாவட்டங்களாகவும் (District), மாவட்டகங்கள் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் (Village) பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த‌ மாவட்டகங்கள்/வட்டங்கள் /கிராமங்களின் கீழ் அனைத்து நிலங்களும் அளக்கபட்டு, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் (அடையாளப்படுத்துவதற்காக) வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும், புல எண்ணிற்கு உட்பிரிவுகளும் உண்டு.

புல எண்ணின் பயன்:

நிலங்களை பொறுத்து, ”புல எண்” மிகவும் அவசியமான மற்றும் அடிப்படையான தகவல். புல எண்களைக் கொண்டே நிலத்தினை அடையாளப்படுத்துதல், நில பரிவர்த்தனை செய்தல் , வில்லங்க சான்றிதழ் பெற இயலும், அதுமட்டும் இன்றி இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள இயலும் அவற்றுள் முக்கிய சில,

  1. நிலத்தின் வகைபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.
  2. நிலம் சரியாக எங்கே அமைந்துள்ளது என்பதை அறிய முடியும்.
  3. எத்தனை நபர்கள் அந்த புல எண்ணிற்கு உரிமையாளர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
  4. நிலத்தின் நான்கு எல்லைகளை அறிந்து கொள்ள முடியும்.
  5. மற்ற சுற்றிய நிலங்களை பற்றி தகவல்கள் அறிந்து கொள்ள முடியும்.

நிலம் வாங்குவதற்கு முன் அதனை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்வது அவசியம், விவரங்கள் சேகரிப்பதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக புல எண் அமையும்.

Join The Discussion